கண்மூடி
கற்பனையில் லயித்து
அவளன்பை ஆழமாய் உள்வாங்கி
நினைவுச் செல்களில் துழாவியெழுதிய வரிகளில்
அவளின் வாசனை
அமிழ்ந்திருப்பதாக நினைத்து
ஓடிச் சென்று அருகமர்ந்து
ஒவ்வொரு வரியாக வாசித்துக் காட்டியபோது
உணர்வற்றுச் சொன்னாள்
அவ்வாசனை தனதில்லையென..
அதே வரிகளை
அன்றொரு நாள் வாசித்தபோது
அன்பு முத்தமொன்றை ஈந்து
வைரனா நீயென்றவளை
ஊடல்குளிர் உள்சென்று
இதயத் தமனிகளில்
வாசனையறியும் உணர்வை
அடைத்து விட்டதோ..?
No comments:
Post a Comment