Saturday 8 November 2014

ஏக்கமுள்

















பல்வேறு நிகழ்வுகளில்
ஒத்த உணர்வுகள்
எட்டிப் பார்க்கின்றன.

விட்டுக் கொடுத்தலில்
முந்திக்கொள்ளும் மனப்பாங்கு
பாசவேர்களாய் பதிந்திருக்கிறது

அக்கறை கொள்வதில்
அன்பு முகிழ்ந்து மலர்
கொத்தாய் மணக்கிறது

பிறரிடம் பகிரவியலா நேசம்
ஆளுமை கொண்டு உயர்
ஆட்சி செய்கின்றது

அவையில் முந்தியிருப்பச் செய்து
ஆனந்தம் கொள்ளும் பாங்கில்
அன்னையின் சாயல் தெரிகிறது

வாடிவதங்கும் கொடி
படர்ந்து மேலெழும்பி
தாங்கும் கோலாய் நிற்கையில்
நட்பின் உயர்ச்சி மிளிர்கிறது

இவையெல்லாம் இருந்துமென்ன?
உணர்வுகளில் அருகிருந்தும்
உயிர் தொட்டு வாழ்ந்திருந்தும்
இடை நிற்கும் தொலைவுகளில்
ஏக்கமுள் முளைத்து

பெருங்காடாய் நிற்கின்றது

No comments:

Post a Comment