Saturday 8 November 2014

சிறகுதிர்ந்தமனம்


உயிர்க்குடிக்குமுந்தன் விழிக்கதிர்வீச்சில்
உருக்குலைந்தவுளம் உனைக்கொண்டதடி
கயற்விழியாளின் காதல் தேடலில்
கரையுடைந்தமனம் புலம்பெயர்ந்ததடி!

மயில்தோகையென இமைமூடுகளி
மதயானையென எனைக்கொல்லுதடி,
செயல்போதையுற சுவைத்தேனெனவே

சிறகுதிர்ந்தமனம் உனில் சரிந்ததடி !!

No comments:

Post a Comment