Saturday 8 November 2014

விளிம்புகளில் கவிதை



















வளிமண்டலத்தின் இடுக்குகளிலும்,,
கருநிழல்களின் அடுக்குகளிலும்,
சேலைத் தலைப்பின் முடிச்சுகளிலும்,
உணர்வுகளை ஒளித்துவைக்க
இடம்தேடி அலைகிறாள்.
அவளுணர்வுகளின் பிரதிபலிப்பாய்
நானிருப்பதை அறியாமல்..!
கருந்தேள் கொடுக்கென கொண்டானோ நாவை,
கொட்டிய வார்த்தைகள்
உயிர்வலி கொண்டது.
கண நேரம் கண்மூடி
அதை விழுங்க முயற்சித்து
கையிலிருந்த என்னைத் தவறவிட்டு

விளிம்புகளில் கவிதை வடித்தாள்..!

No comments:

Post a Comment