Wednesday 5 February 2014

தொலைந்த வானம்

புகலிடமின்றி
அடைக்கலம் தேடி
சிதைந்திட்ட சிறகினில்
பதுங்கிய தென்மனம்

அடுத்தொரு விடியலின்
வாசனை வரும்வரை,

சிறுதுளி கரைய
பெருமழை பொழியும்வரை,

நகங்களின் உரசலில்
நெருடல்கள் மறையும்வரை,

மறைமுக பொருள்தரும்
முக வரி விலகும்வரை,

கவிதையுள் கலந்திட்ட
கருப்பொருள் உணரும்வரை,

தொலைந்த வானத்தின்
முகவரியின்றி
கலைந்த நினவுகளின்
கற்பனை வாசலில்
காத்திருக்கிறது,
காலங்கள் கடந்து...!

3 comments:

  1. மறைமுக பொருள்தரும்
    முக வரி விலகும்வரை,

    superb

    ReplyDelete
  2. One request... please remove word verification..

    ReplyDelete
  3. எவ்வாறு நீக்குவதென அறியிலேன்

    ReplyDelete