Wednesday 5 February 2014

நான் வர வேண்டும்!

மழையில் நனையும்
மழலையின் மனதுடன்
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கிட வேண்டும்!

கனவிலும் குளிரின்
கடுமையை கண்டு
கனிமலருன்னை
கலந்திட வேண்டும்.

கரையினி லாடும்
மலரினைப்போல
கரம் தொடும் பொழுதில்
மகிழ்ந்திட வேண்டும்.

பெருவயல் நாற்றில்
தழுவிடும் தென்றல்
தரும் சுகமாக
மடிதொட வேண்டும்.

கருவென மாறி
கவித் தமிழ் வழியே
அருசுவை யுணவு
நீதர வேண்டும்.

உயிருடல் கலந்து
உணர்வுகள் ஒன்றிட
உளம் தொடும் பதியென
நான் வர வேண்டும்!

1 comment:

  1. கரையினி லாடும்
    மலரினைப்போல
    கரம் தொடும் பொழுதில்
    மகிழ்ந்திட வேண்டும். //

    arumai

    ReplyDelete