Wednesday 5 February 2014

அவசர பூச்செண்டுகள்

அதிகாலை அவசரங்களை
அள்ளிவரும் பூச்செண்டுகள்,

பொன்வண்டுக் கண்களிலே
துள்ளிவரும் மின்பிம்பங்கள்.

சக்கரங்கள் உருள
சாலையெங்கும்
சிதறிய சொல்முத்துக்களை
யார் அள்ளுவார்?

உற்சாக முகங்களை
உற்று நோக்க
ஒரு நிமிட அவகாசமின்றி
ஒளிந்தோடும்
தீப்பிடித்த கால்களுக்கிடையில்
சிதைந்தே போகின்றன.

அவர்கள்,
வளராமல் போகட்டும்,
வாழ்வின் துன்பத்தை
உணராமல் போகட்டும்.
என்றும் இச்சிரிப்பு மழையில்
நனைந்தே வாழட்டும்,!

2 comments:

  1. அவர்கள்,
    வளராமல் போகட்டும்,
    வாழ்வின் துன்பத்தை
    உணராமல் போகட்டும்.
    என்றும் இச்சிரிப்பு மழையில்
    நனைந்தே வாழட்டும்,! //

    Poet's intention is good.. but I wish the same happiness through out their life !

    ReplyDelete