துணைவியென்று தொடர வந்தேன்,
இணைந்து என்னுள் தொலைந்து விட்டாய்.
கலந்து எந்தன் கனவு கண்டு
கவிதை கொண்டு உருகி நின்றாய்.
வாசம் கொண்ட முல்லையென்று
நேசம் கொண்ட கிள்ளையென்று
பாசம் கொண்ட பிள்ளையென்று
சுவாசம் கொண்டேன் உன்னையின்று.
தேடிக் கண்ட தேன்மலரின்
தேனெடுக்கும் வண்டென நான்.
நாடியுள்ளில் நாதமென
நாடிவந்த நாயகன் காண்!
No comments:
Post a Comment