Tuesday, 27 August 2013

கேள்வி

                           ஒரு நாள் நான் ஒரு கனடா நாட்டு ஜோடியுடன் இரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பேச்சு இந்தியாவில் உள்ள லஞ்சம் குறித்து திரும்பியது. எவ்வளவுதான் நமது நாட்டின் மேல் குறை இருந்தாலும், அதை அடுத்த நாட்டான் சொல்ல மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது.
                         அப்போது அருகில் இருந்த இன்னொரு நண்பர் ஒரு கேள்வி கேட்டார். அதுதான் இப்போது உங்கள் முன் நான் வைக்கப் போகும் கேள்வியும் கூட.
                        “ஒரு அலுவலகத்தில் இரண்டு கிளார்க்குகள் வேலை செய்கின்றனர். ஒருவர் மேசையில் ஃபைல்கள் குவிந்திருக்கும். அந்த கிளார்க் வேலைக்கே ஒழுங்காக வர மாட்டார். வந்தாலும் சுறுசுறுப்பாக பணி புரிய மாட்டார். ஆனால் காசு வாங்காத கண்ணியவான். தனக்கு வரும் சம்பளம் போதுமென நினைப்பவர்.
                       இன்னொரு கிளார்க் மேசையில் அதிகமாக ஃபைல்ஸ் இருக்காது. எல்லாம் உடனுக்குடன் தட்சணைக்கேற்ப முடித்து தரப்படும். வருபவரிடத்தெல்லாம் அவ்வளவு அன்பாக பழகக் கூடியவர்.
                       இப்போது உங்களுக்கு அலுவலகத்தில் யார் மீது பிரியம் இருக்கும்?”
பணி உயர்வு தர வேண்டிய நிலை வந்தால் அந்த இருவரிடத்து யாருக்கு தருவீர்கள்?”

No comments:

Post a Comment