கட்டுத்தறிக்குள் கட்டுப்படாதவற்றை
விட்டுவிட விரும்பாமல்
எட்டிப்போகாதவரை துர்லபமில்லையென்பதால்
விட்டுப் பிடிக்கலாமென எண்ணி
கட்டுத்தளைகளை தளர்த்தியவுடன்
சுற்றித்திரிந்து
சொர்க்கமெது, நரகமெதுவென அறிய ஆவல்கொண்டு
அத்தனையிலும் கைவைத்து
சுட்டுக்கொண்டது,
சுகமும் கண்டது
உற்றத்துணையெனவே உடன்வந்தவரோ
சித்தம் பிறழ்ந்து
எங்கும் அலைகிறதென வருந்தி
வட்டமிட்டு அதனுள் வசிக்கப் பணிய
முற்றும் துறந்தவரும்
கற்றுத் தெளிந்தவரும்
எல்லைத்தொடுமுன்னே
கண்ட வழியிதுவெனச் சொல்லி
தன்வழியே செல்லத்
துடிக்குதந்தப் பாழ்மனது
No comments:
Post a Comment