Saturday, 3 August 2013

நெஞ்சம் நிறைந்தவள்

















அன்பின் இருப்பிடமே
காதல் பிறப்பிடமே
அர்த்தமுள்ள வாழ்வை
அளித்து மகிழ்பவளே.

தும்மல் இட்டாலும்
துடிப்பேன் அறியாயோ?
விசும்பல் கேட்டாலோ
வெடிப்பேன் உணராயோ?

வீசும் காகிதமாய்
வீணில் பறந்தவனை
விண்ணைத் துடைத்தெடுத்து
வண்ணம் கொடுத்தவளே!

தொற்றும் மகிழ்வதனைப்
பற்றிக் கொள்பவளே,
அற்றம் அற்ற நம்
அன்பை நினைவில் கொள்.

நட்பின் வழியொழுகி
நெஞ்சம் நிறைத்தவளே!
நெஞ்சம் நிறைந்த என்
நண்பர்தின நல் வாழ்த்துக்கள்!

புதிதாய் பிறக்கிறோம்


















பள்ளிக்காலங்கள்
சுமை மறந்து
பறந்த பொழுதுகள்.
எக்காலமும்
எக்காளமும்,
முக்காலமும்
சந்தோழஷமும்...
வானத்தில் பறக்கின்ற
பறவைக்கு
வெயிலில்லை,
மழையில்லை..
எங்களுக்கும் தான்.
சுட்டாலும்,
பட்டாலும்,
சுவையற்றுப் போனாலும்,
வெட்கங்கள் களைந்து
ஒன்றாக புசிப்போம்.
கனவில் கூட
கட்டிப் புரண்ட
சண்டையில்லை.
ஒரு வீட்டில் உண்டாலும்
ஊர் சுற்றித் திரிந்தாலும்,
விளையாடிப் பறந்தாலும்
விதமொன்றாய் இருந்தாலும்
நட்பால் இணைந்தோம்.
கவலைக் கொண்டால்
சேர்ந்தே அழுவோம்.
மகிழ்ச்சி வந்தால்
ஒன்றாய் மலர்வோம்.
காட்சிப் பெட்டியிலும்
கண்ணித் தட்டியிலும்
நாட்டம் அதிகமில்லை.
நட்பே வாச முல்லை.
காலம் கலைத்த கூடாய்,
கவலை தோய்ந்த சுவடு பூண்டு
நட்பைத் தோலைத்து,
நாட்கள் களைந்தோம்.
முக நூலின் மூலம்
நட்பின் முகவரி
மீண்டும் கண்டதாய்
மகிழ்சியோ மகிழ்ச்சி.
ஒவ்வொரு நாளும்
புதிய பதிவுகள்,
புதிய கொணங்கள்,
புதிய அலசல்கள்,
மனதில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறக்கின்ற
உணர்வுகள்.
நன்றி என் தோழமைகளே!

நட்பின் வாசம்

ஒவ்வொரு விடியலிலும்
நட்பின் வாசம்
நம் மனதில் வீசட்டும்!

Friday, 2 August 2013

மூழ்கலானேன்






















அக முத்தை மறைத்து
புற முத்தை நிறைத்து
விழியம்பு தொடுத்து
விளையாட வந்தாள்.

இதழ் தந்த சுவையில்
இசை கண்ட பேச்சில்
இவள் கொண்ட மூச்சில்
இமை வாளின் வீச்சில்

நுதல் உண்ட நிலவின்
குழல் மின்னும் ஒளியில்
எனை மீட்க நாடி

இனும் மூழ்க லானேன்.

புலிப் பார்வை















சுழல் கொண்ட பூமி
சுற்றிவரும் காற்று
புயல் போல நெஞ்சில்
பலம் கொண்ட வீச்சு
மழைக் கால மேரு
தரும் ஊற்றைப்போல
உனைக் கண்ட எந்தன்
உளம் வீர னாச்சு.

களம் கண்ட வீரம்
கனல் போல ஏறும்.
அனல் வீச்சி லந்த
அலைக் கூட மாயும்.
சினம் கொண்ட எந்தன்
புலிப் பார்வை யுந்தன்
விழி யம்பு தைக்க
விளைவென்ன ஆகும்?

தமிழ் பெண்ணின் கண்கள்
தளையற்ற வீரம்
தழைத்தோங்க செய்து
அனல் ஓங்கச் செய்யும்.
அதைப் போல உந்தன்
கயல் கண்கள் கண்டு
அகம் கூட வீரச்
சுரம் கூடலாகும்.

அகங்காரம் கொண்ட
கொடியோனை வெல்ல
அனல் வீசு முந்தன்
விழியம்பு கொண்டு
மதயானைக் கொல்லும்
அரிமாவைப் போல
கதம் செய்து கொன்று

சினம் ஆற்றி வருவேன்.

உதவி

     அசுரர்களும், தேவர்களும், பாற்கடலை மந்தாரமலையைக் கொண்டு, வாசுகியை கயிறாக்கி கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை குடிக்க எனக்கு, உனக்கு என அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடைய போட்டி வந்தது.
     அப்போது அங்கு வந்த நாராயணர், “இந்த அமிர்தத்தை எல்லாருக்கும் வழங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. யாரும் நீட்டிய கரங்களை மடக்காமல் பெற்று, மடக்காமல் வாயில் அமிர்தத்தை ஊற்றி குடிக்க வேண்டும்” என்றார்.
     முதலில் அசுரர்களுக்கு வழங்கப் பட்டது. கரங்களை மடக்காமல் வாங்கி அப்படியே குடிக்க வேண்டுமென நிபந்தனையாதலால், அசுரர்களால் அந்த அமிர்தத்தை வாங்கி வாய்க்கு கொண்டு செல்ல முடியவில்லை. எல்லாம் சிந்தி விட்டது.
     தேவர்களுக்கு கொடுக்கப் பட்ட போது, அவர்கள், ஒரு உபாயம் கண்டனர். முதலாமவர் வாங்கி கையை மடக்காமல் அடுத்தவர் வாயில் ஊற்றிக் கொடுத்தார். இரண்டாமவர் வாங்கி மூன்றாமவர் வாயில் ஊற்றிக் கொடுக்க இப்படியாக ஒவ்வொருவரும் குடித்து கடைசி தேவர் வாங்கி முதலாமவருக்குக் கொடுக்க அனைவரும் அமிர்தம் உண்டனர்.
     நாம் எப்போதும் அடுத்தவருக்கு நன்மை செய்யும் போது நமக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

(அப்போதே தேவர்கள் நம்மள ஏமாத்திட்டங்க போல)

உன் நினைவே




ஓரிடம் நில்லா
உணர்வுகள் தன்னில்
உன் நினைவதுவன்றி

வேறெதுமில்லை.